விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் வடக்கு பகுதியில் உள்ள செங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த கண்மாய் நீர் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், விவசாயம் போன்ற தொழில் வளங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.