விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்ல காலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள், வேைலக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.