விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அணையை ஆகாயத்தாமரை செடிகள் முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கரையோர பகுதிகளில் கருவேலமரங்கள் வளர்ந்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. அணையின் வளாகத்தில் சிறுவர் பூங்கா இருந்ததற்கான சுவடின்றி உள்ளது. சிறுவர் பூங்காவினை சீரமைப்பதுடன் அணையினை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள், கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.