கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-01-08 15:52 GMT

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டில் சன்னதி தெரு, திருநீலகண்டர் தெரு, செம்படத்தெரு, ராமசாமி உடையார் தெருக்களில் கால்வாய்களை சரியாக தூர்வாருவது இல்லை. குப்பைகளை முறையாக சேகரிப்பது இல்லை. ஆங்காங்கே குப்பைகளும், கால்வாய்களில் கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும். கால்வாய்களை தூர்வார வேண்டும். குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்.

-மோகன் கிருஷ்ணன், நலம் காக்கும் நற்பணி மன்றம்.

மேலும் செய்திகள்