நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட தம்பா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.