குரங்குகள் ெதால்லை

Update: 2022-08-10 13:51 GMT

அரக்கோணம் மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வேலைக்கு செல்வோர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வெளியூர் செல்வோர் என ஏராளமானோர் தினமும் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ரெயில் நிலையத்துக்கு குழந்தைகளுடன் வரும் பயணிகள், முதியோர் குரங்குகள் தொல்லையால் அவதிப்படுகின்றனர். குரங்குகளால் நடை மேம்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள குரங்குகளையும், நாய்களையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-அய்யப்பன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்