ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-12-14 12:29 GMT

 கீழ்பென்னாத்தூர் தாலுகா இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு நீர் வரத்து ஓடை கால்வாய் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து அதில் குடிசைகளை கட்டி உள்ளனர். ஒருசிலர் விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரிக்கு நீர் வரவில்லை. கடந்த ஆண்டு பலத்த மழை பெய்தும் ஏரி நிரம்பவில்லை. மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் கோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் கிராமத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜானகிராமன், இசுக்கழிகாட்டேரி.  

மேலும் செய்திகள்