ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-11-09 12:20 GMT

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் ஏரி உள்ளது. ஏரிக்கரையை ஆக்கிரமித்து குடிசைகள் போட்டுள்ளனர். விவசாயமும் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முன் வர வேண்டும்.

-பொதுமக்கள், மல்லவாடி.

மேலும் செய்திகள்