பிச்சை எடுப்பவர்களால் தொல்லை

Update: 2023-02-26 16:45 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து சாமி சன்னதிக்கு வரும் வழியில் சில பெண்கள் மற்றும் முதியவர்கள் யாசகம் கேட்பதாக பிச்சை எடுத்து பக்தர்கள் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்