ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-04-28 16:49 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் வெளிப்புறத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னக்கடை தெரு, மத்தலங்குளத்தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபாதைகள் உள்ளன. இந்த நடைபாதைகள் அங்குள்ள கடைகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதில் நடந்து செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்