ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-01 17:00 GMT

ஏலகிரிமலை ஊராட்சியில் புங்கனூர் கிராமத்தின் மெயின் ரோடு முதல் படகு இல்லம் செல்லும் வரை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. அதிகாரிகள் எச்சரித்து சில கடைகள் மட்டும் அகற்றப்பட்டன. ஆனால் மீன்கடைகள், பழக்கடைகள் ஆகியவைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், ஏலகிரிமலை கிராமம்.

மேலும் செய்திகள்