ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்

Update: 2023-03-01 16:53 GMT

வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ராணிப்பேட்டையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், பஸ்களும் சோளிங்கர், திருத்தணி, அரக்கோணம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம், காஞ்சீபுரம், சென்னை போன்ற பல ஊர்களுக்கு செல்கின்றன. இந்த வழியே பல தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் தொழிற்சாலை வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. இந்த நுழைவு வாயிலின் இரு பகுதிகளிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. வாலாஜா நகராட்சி நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற முன்வர வேண்டும்.

-முத்துக்குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்