திறந்த வெளியில் மதுபானம் குடிக்கும் அவலம்

Update: 2024-07-14 20:28 GMT

குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரை, காமராஜர் பாலத்தையொட்டி, புதிதாக அமைக்கப்படும் ஒரு வழிப்பாதை பகுதியில் ஒரே இடத்தில் அரசு மதுக்கடைகள் 2 உள்ளன. ஒரு வழிப்பாதை கைப்பிடி சுவர்கள் மீது வரிசையாக அமர்ந்து பட்டப் பகலிலும், மாலை, இரவு நேரத்திலும் மதுபான பிரியர்கள் திறந்தவெளி பாராக கருதி மதுபானம் குடித்து வருகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்தோடு சென்று வருகிறார்கள். திறந்த வெளியில் மதுபானம் குடிப்பதை போலீசார் தடை செய்ய வேண்டும்.

-மதுசூதனன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்