ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், தெருக்களில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலையும், பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து போக முடியாத நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கின்றன. அந்த நேரத்தில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், ஆரணி.