நாய்கள் தொல்லை

Update: 2023-05-28 17:39 GMT

ஆற்காடு அண்ணா சிலை, கண்ணமங்கலம் கூட்ரோடு, மாசா பேட்டை ஆகிய பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகுந்த அச்சப்படுகின்றனர். மேலும் வெயில் காலம் என்பதால் நாய் கடித்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கடகிஷோர், ஆற்காடு.

மேலும் செய்திகள்