நாய்கள் தொல்லை

Update: 2023-03-05 11:36 GMT

செங்கம் நகரில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாலை, இரவில் தெருகளில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. இரவில் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. சிறுவர்கள், பள்ளி குழந்தைகள் தெருவில் விளையாட அச்சப்படுகின்றனர். செங்கத்தில் மேலப்பாளையம் பகுதியில் வெறிநாய் அப்பகுதியில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. அப்பகுதியில் செல்பவர்களை திடீரெனத் துரத்தி பாய்ந்து கடிக்க வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் மேலப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய் உள்பட பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நாய்களை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும்.

-தனபால், செங்கம்.

மேலும் செய்திகள்