பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
இதற்காக தோண்டப்படும் மண்ணை அங்குள்ள கடைகளுக்கு முன்பு கொட்டுவதால் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறாக உள்ளது.
வாகனங்களை நிறுத்த முடியாமலும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடித்து, கடைகள் முன்பு கொட்டப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
-சுதாகர், பள்ளிகொண்டா.