வீதியில் கடைபோடும் வியாபாரிகளால் இடையூறு

Update: 2024-02-04 17:39 GMT

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடக்கிறது. அங்கு காய்கறி வியாபாரிகள் கடைகளை விட்டு விட்டு தரையிலும், வீதியிலும் அமர்ந்து வியாபாரம் செய்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழாகும் அவலம் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்