வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை தேசிய நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து கடைகளின் பெயர் பலகைகளை வைக்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்படும் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும். மேலும் பல இடங்களில் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள நிரந்தர விளம்பர பலகைகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவதாஸ், வாலாஜா.