ஆபத்தான கிணறு

Update: 2022-08-11 12:14 GMT

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் பின்பக்கம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள கிணற்றின் ஒரு பகுதி சுவர் இடிந்து தரை மட்டத்தில் உள்ளது. மேலும், அதைச் சுற்றி உள்ள சாலைகளும் குண்டும், குழியுமாக இருப்பதால் பஸ் நிலையத்துக்கு அந்த வழியாக வந்து செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் விபத்து ஏற்படும் விதமாக செல்கிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மற்றும் கிணற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புவனேஷ்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்