ஆபத்தான கட்டிடம்

Update: 2022-09-12 12:01 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. அதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு வரும் நபர்கள் பத்திரம் பதிவு செய்ய, பத்திரம் எழுதுபவர்கள் புதிய கட்டிடத்தில் இடம் இல்லாததால், அருகில் உள்ள பழமை வாய்ந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் உட்கார்ந்து பத்திரம் எழுதுகிறார்கள். எழுத வருபவரும் அங்கு தான் அமருகிறார்கள். பழைய கட்டிடம் சேதம் அடைந்து இருப்பதால் எப்போது விழும் எனத் தெரியவில்லை. ஆபத்து வரும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மதுசாதிக், தூசி.  

மேலும் செய்திகள்