ஆபத்தான பேனர்கள்

Update: 2024-03-17 17:23 GMT

நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்-திருத்தணி சாலையில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. சாலையோரம் அனுமதி பெறாமல் சில பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால் சாலையோரம் பஸ்சுக்காக காத்திருப்போருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதி பெறாத பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்தாஸ், சேந்தமங்கலம். 

மேலும் செய்திகள்