கண்ணமங்கலம்-வண்ணாங்குளம் இடையே அழகுசேனை கிராமத்துக்கு செல்லும் தார் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு அபாயகரமான வளைவு உள்ளது. அந்தப் பகுதியில் சாலையோரம் திறந்தவெளி கிணறு உள்ளது. அதன் அருகில் மதுபான கடை உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் வந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் திறந்த வெளி கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. திறந்த வெளி கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.