நாற்காலிகள் சேதம்

Update: 2023-01-18 11:54 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் நடைப்பயிற்சிக்காக 4 புறமும் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8 இடங்களில் அமைக்கப்பட்ட இரும்பு நாற்காலிகள் சேதம் அடைந்துள்ளன. நடைப்பயிற்சியில் ஈடுபடுவோர் சிறிது நேரம் அமைர்ந்து இளைப்பாற போதிய நாற்காலி வசதிகள் இல்லை. தற்போது உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் அவர்கள் கீழே விழும் அவல நிலையில் உள்ளன. கோட்டை மைதானம் தற்போது விளையாட்டுத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆரணி நகராட்சி எந்த விதத்திலும் கண்டு கொள்வதில்லை. நான்கு புறமும் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு நாற்காலிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சுந்தரம், ஆரணி. 

மேலும் செய்திகள்