மாடுகள் தொல்லை

Update: 2024-04-14 15:05 GMT

வாலாஜா நகரில் முக்கிய சாலைகளாக சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை, வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாலாஜா-சோளிங்கர் சாலை ஆகியவைகள் உள்ளன. அந்தச் சாலைகளில் தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். அந்தச் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. அந்த மாடுகளால் விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை வாலாஜா நகராட்சி அதிகாரிகள் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-செல்வம், வாலாஜா. 

மேலும் செய்திகள்