வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைகளில் ஏராளமான கால்நடைகள் கண்டபடி சுற்றித்திரிகின்றன. ஒரு சில இடத்தில் சாலையிலேயே மாடுகள் படுத்துத் தூங்குவதும், கூட்டம் கூட்டமாக நிற்பதுமாக உள்ளன. இதனால் வாகன விபத்துகள் நடக்கிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்க ேவண்டும்.
-காமராஜ், வாணியம்பாடி.