மூடியே கிடக்கும் சமுதாயக்கூடம்

Update: 2023-03-15 12:48 GMT

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் விளாப்பாக்கம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2007-2008-ம் ஆண்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஏழை எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்ட இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முட் புதர்கள் படர்ந்து மூடியே கிடக்கின்றன. இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்