கார் பார்க்கிங் ஏற்படுத்த வேண்டும்

Update: 2024-04-14 15:01 GMT

திருவண்ணாமலையில் நடக்கும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமி விழாவும் ஒன்றாகும். இந்த விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். அதில் பெரும்பாலான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகிறார்கள். அவர்கள் தங்களின் கார்கள், வேன்களை திருவண்ணாமலையில் பார்க்கிங் செய்ய போதிய வசதி இல்லாததால் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிற சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்