கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-05-07 13:01 GMT

திருவண்ணாமலை நகராட்சி மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது பெய்து வரும் மழையின் காரணமாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவில் வீடுகளில் மட்டுமின்றி ஓட்டல்களிலும் கூட நிம்மதியாக அமர்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்கள் இரவில் கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாத நிலைக்கு கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்