அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-12 11:04 GMT

தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தவிர்க்க அரசு அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது, என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பஸ் நிலையம், அண்ணா சிலை, வேலூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் நகராட்சி அனுமதி பெற்று தான் வைக்கப்பட்டுள்ளதா? என்பது ெதரியவில்லை. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?

சரவணன் ஆற்காடு 

மேலும் செய்திகள்