உடைந்த மரம் அகற்றப்படுமா?

Update: 2024-06-30 19:13 GMT

வேலூர் கோட்டை பூங்கா அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய அரசமரத்தின் கிளை முறிந்து பூங்காவில் விழுந்தது. அதை அப்புறப்படுத்தாமல் விட்டு விட்டதால் பூங்காவுக்கு வரும் பெரியவர்கள் அந்த மரத்தில் அமர்ந்து பொழுதைப் போக்குகின்றனர். மேலும் குழந்தைகள் அதன் மீது ஏறி விளையாடுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடை பெறுவதற்கு முன்பு உடைந்து கிடக்கும் மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், வேலூர்.

மேலும் செய்திகள்