மாலை நேரத்தில் சரியாக இயக்கப்படாத பஸ்

Update: 2023-07-09 11:53 GMT

ஆம்பூரில் இருந்து சின்னபள்ளிக்குப்பம் வழியாக வாணியம்பாடி வரை செல்லும் அரசு பஸ் மாலை நேரத்தில் தினமும் சரியாக வருவதில்லை. தினமும் காலையில் சரியான நேரத்தில் வருகிறது. ஆனால், மாலை நேரத்தில் மட்டும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே மாலை நேரத்திலும் சரியான முறையில் தவறாமல் பஸ் சென்று வர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

-வெங்கட்மது, ஆம்பூர்.

மேலும் செய்திகள்