ஆபத்தான கட்டிடம்
பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில் அரசுக்கு சொந்தமான 2 கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் அபாயகரமான சூழலில் உள்ளன. இந்த 2 கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வந்து செல்லும் வழித்தடமாகவும் பயன்பாட்டில் உள்ளது.
உயிர்ப்பலி வாங்க வாய்ப்பு மிகுந்த அபாயகரமான கட்டிடத்தின் முன்புறத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தகர தடுப்பும் எச்சரிக்கை அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைத்தால் மட்டும் விபத்து நடப்பதை தடுத்து விட இயலாத சூழலைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
சாகுல் ஹமீது, தாராபுரம். 97885 66614