பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2023-01-22 16:37 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பறையம்பட்டு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதை இன்னும் திறக்காமல் பூட்டியே வைத்துள்ளனர். கிராம மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை அதிகாரிகள் திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-குருமூர்த்தி, பறையம்பட்டு.

மேலும் செய்திகள்