மீன், கோழி இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-12-24 17:34 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி அருேக பெரியார் நகர், வளத் தோட்டம், பல்லாவரம் மேட்டு காலனி, அரசு நெல் கொள்முதல் நிலையம், இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. அந்த மெயின் ரோட்டில் இறைச்சிக்கழிவுகள், மீன் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து சாலை ஓரமாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. தூசி பல்லாவரம் சாலை ஓரம் மீன், இறைச்சிக்கழிவுகள் கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

-சுரேஷ், தூசி.

மேலும் செய்திகள்