அரியலூரில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அமருவதற்குப் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பலர் கால் வலியால் சோர்வடைந்து, மயங்கி விழும் சூழலும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பயணிகள் நிழலில் அமர்ந்து பயணம் செய்ய பஸ் நிலையத்திற்குள் இருக்கை வசதிகளை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.