ஏ.டி.எம். வசதி வேண்டும்

Update: 2023-03-19 16:22 GMT

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் அவசரத்துக்கு பணம் எடுப்பதற்கு ஒரு ஏ.டி.எம். மையம் கூட இல்லை. இதனால் பயணிகள் பணம் எடுப்பதற்கு கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வரும் சூழ்நிலை உருவாகிறது. எனவே வங்கி அதிகாரிகள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜோதி, கொசப்பேட்டை.

மேலும் செய்திகள்