பள்ளியில் சமூக விரோத செயல்கள்

Update: 2023-06-14 17:52 GMT

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இதனால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டது. இரவில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு காலிப்பாட்டில்களை அங்கேேய உடைக்கின்றனர். பள்ளிக்குள் விரும்ப தகாத செயல்களும் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும். துத்திப்பட்டு பகுதியில் தலைதூக்கும் சாராய விற்பனையை தடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், துத்திப்பட்டு.

மேலும் செய்திகள்