குடிபோதையில் மோட்டார்சைக்கிள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை

Update: 2023-07-09 12:46 GMT

செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு மதுபானத்தை வாங்கி குடித்து விட்டு போதையில் மோட்டார்சைக்கிள்களில் செங்கம் பேரூராட்சி, மேல்செங்கம், இறையூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வருவோர் அந்த வழியாக எதிரே வருவோர் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். போலீசார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு முறையான ஆவணம், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், குடிபோதையிலும் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

-சுபாஷ்சந்திரன், செங்கம். 

மேலும் செய்திகள்