பேனர் வைப்போர் மீது நடவடிக்கை

Update: 2024-07-07 20:08 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தினமும் காஞ்சீபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. ஏராளமான பயணிகளும் வந்து செல்கிறார்கள். பஸ் நிலைய பகுதியில் அனுமதி பெறாமல் சிலர் ேபனர்கள், விளம்பர பலகைகள் வைக்கின்றனர். விளம்பர பலகைகள், பேனர்களால் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. அனுமதி பெறாமல் பேனர், விளம்பர பலகைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், பனப்பாக்கம்.

மேலும் செய்திகள்