பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2024-01-07 17:28 GMT

வாலாஜா மார்க்கெட் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, சித்தூர், வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கான நிழற்கூடம் இருந்தது. காலப்போக்கில் அந்த நிழற்கூடம் சிலரால் திட்டமிட்டு அகற்றப்பட்டது. இதனால் மக்கள், மாணவ-மாணவிகள் மழை வெயிலில் ஒதுங்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். இங்கு புதிதாக மீண்டும் பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-தருண், வாலாஜா. 

மேலும் செய்திகள்