தவறாக எழுதப்பட்ட பெயர் பலகை

Update: 2024-03-10 18:11 GMT

வேட்டவலம் வழியாக செல்லும் மங்களூர்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையோரம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டி பலகையில் வேட்டவலம் அருகில் உள்ள ஊரின் பெயர் ‘அணுக்குமலை’ என்பதற்கு பதிலாக அனுகுமலை என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் வழிகாட்டி பலகையில் தவறுதலாக உள்ள ஊரின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை உடனடியாக சரி செய்வார்களா?

-தனபால், வேட்டவலம். 

மேலும் செய்திகள்