திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள அதிகாரிகளை காண அலுவலக வேலை நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். இதில் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அமருவதற்கென முதல் தளத்தில் இரும்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு இரும்பு இருக்கையின் கால் உடைந்து பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதை அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே மக்கள் பயன்பாட்டில் இருந்த உடைந்த இரும்பு இருக்கையை சரி செய்து தர வேண்டும்.
-கண்ணன், திருவண்ணாமலை.