திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் பல ஆண்டுகளாக கழிவு நீர் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மூர்த்திகாளி, சமூக ஆர்வலர், செவ்வத்தூர்.