தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு தெற்கே சுப்பிரமணியபுரம் பகுதி உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் பாதையில் மூக்கரை பிள்ளையார்கோவில் கீழ்புறம் பெயர் பலகை ஒன்று உள்ளது. இந்த பெயர் பலகையில் சுப்பிரமணியபுரம் என்பதற்கு பதிலாக ‘சுப்பரமணியபுரம்’ என எழுத்து பிழையுடன் எழுதப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பெயர்ப்பலகையில் தமிழில் உள்ள எழுத்துப்பிழையை சரி செய்வார்களா?