வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த மராட்டிபாளையம் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் சுடுகாடு உள்ளது. இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் காரிய மண்டபம் பாழடைந்து செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. காரிய மண்டபத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது. இதனால் இறுதிச்சடங்கு செய்ய வரும் மக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காரிய மண்டபத்தை சீரமைத்துத்தர வேண்டும்.
-சுதாகர், மராட்டிபாளையம்.