அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வேலூர் சாலையோரம் அமைந்துள்ள சுற்றுச்சுவரை உடைத்து வழி ஏற்படுத்தி உள்ளனர். அந்த வழியில் இரவில் பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் ஊடுருவி தீய செயல்களை செய்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் உடனடியாக சுற்றுச்சுவரை கட்ட வேண்டும். இல்லையேல் கதவு வைத்து பூட்ட வேண்டும்.
-ராஜன், அகரம்.