கால்வாய் ஆக்கிரமிப்பால் வறண்ட ஏரி

Update: 2026-08-30 19:10 GMT

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் ஏரியில் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிக்கு வரும் உத்திர காவிரி ஆற்று நீர் கால்வாயை ஒடுகத்தூரைச் சேர்ந்த சிலர் பல ஆ‌ண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நீர் வருவது தடைபடுகிறது. இதற்கு முன்பு வருவாய்த்துறை நீர்வளத்துறை, காவல்துறை இணைந்து பல முறை முயற்சி செய்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. வரத்துக் கால்வாய்களும் சீர்செய்யவில்லை . இந்த ஏரிக்கு நீர் வந்து நிரம்பினால் உபரி நீர் அகரம் ஏரிக்கு செல்லும். பின்னர் உபரி நீர் நாகலேரி, கொவிந்தப்பன் கொட்டாய், ஆண்டிக்கொட்டாய், முகமது புரம், திப்பசமுத்திரம், பள்ளிகொண்டா ஏரிகளுக்கு போய் பாலாற்றில் கலக்கும். வேப்பங்குப்பம் ஏரிக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-அசோக், வேப்பங்குப்பம்.

மேலும் செய்திகள்