மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலை ஆறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தான் கொண்டல் முதல் திருத்தோணிபுரம் வரை உள்ள கிராமங்களில் பாசன வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஆகாயத்தாமரை மண்டி நீரின் போக்கை தடுத்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் சீர்காழி.