மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் நூலக வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதி பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். இவர்கள் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள நூலகங்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். எனவே இக்கிராமத்தில் நூலகம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.